9 26
ஏனையவை

பொதுத் தேர்தலுக்காக சென்ற மக்களுக்கு விசேட போக்குவரத்து சேவை

Share

பொதுத் தேர்தலுக்காக சென்ற மக்களுக்கு விசேட போக்குவரத்து சேவை

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தூர பிரதேசத்துக்கு சென்று கொழும்பு திரும்பும் மக்களுக்காக விசேட பேருந்து சேவைகள் வழங்கப்படுமென இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ண ஹன்ச தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (16) முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பமாகி நாளை (17) மற்றும் நாளை மறுதினம் (18) வரை இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 14ஆம் திகதியன்று இடம்பெற்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மக்கள் வாக்களிப்பதற்காக குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் விசேட போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...