14 13
ஏனையவை

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சத்தியப்பிரமாணம் செய்த கஜேந்திரகுமார்

Share

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சத்தியப்பிரமாணம் செய்த கஜேந்திரகுமார்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் மலர் அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இன்றையதினம் (19) முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்றிருந்த போதே அவர் இவ்வாறு அஞ்சலி செலுத்தினார்.

நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் தாெகுதியில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி (AITC) சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கஜேந்திரகுமார் இன்று பிற்பகல் 12.45 மணியளவில் முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் சுடரேற்றி வணக்கம் செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு சென்று சுடர் ஏற்றி, மலர் தூவி வணக்கம் செலுத்தினார்.

அத்துடன் உரிமைப் பயணத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இனவழிப்பு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து அரசியல் உறுப்பினர்கள் அனைவருமாக சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த அஞ்சலியின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் (S. Kajendran), மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...