14 8
ஏனையவை

கண்டுபிடிப்பு தளமாக மாறிய வயிறு: பல மில்லியன் ரூபா இரகசியம் அம்பலம்

Share

போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சியரா லியோன் நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய சந்தேக நபர் சியரா லியோனின் பிரஜை என்பதுடன், துருக்கி எயார்லைன்ஸ் விமானமான TK 730 இல் நேற்று காலை இஸ்தான்புல் ஊடாக இலங்கை வந்தடைந்தார்.

ஸ்கேனர் மூலம் பயணியை சோதனை செய்த அதிகாரிகள், அவரது உடலில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்ததாக தகவல் வெளியானது.

சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடலில் இருந்து கொக்கெய்ன் என சந்தேகிக்கப்படும் 17 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தனது வயிற்றில் அதிகமான போதைப்பொருள் மாத்திரைகள் இருப்பதாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...