8 40
ஏனையவை

விவசாயிகளின் உரமானியம் – அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

Share

விவசாயிகளின் உரமானியம் – அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

உர மானியப் பணத்தை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன (Rohini Kumari Wijeratne Kaviratne) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உர மானிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு (Ministry of Agriculture) தெரிவித்துள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உர மானியப் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கருத்து வெளியிடுகையில், பெரும்போகத்துக்கு தேவையான உரத்தைப் பெற 25,000 உர மானியம் அரசால் வழங்கப்படுகிறது.

இந்த உர மானியம் குறிப்பிட்ட தேதியில் வழங்கப்படும் என அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பல சந்தர்ப்பங்களில் கூறியும் இதுவரை எந்த ஒரு நபரின் வங்கிக் கணக்கிலும் பணம் வைப்பிலிடப்படவில்லை.

அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் விவசாயம் ஆரம்பிக்கப்பட்டு 20 நாட்கள் கடந்துள்ளன.

வெற்றிகரமான அறுவடையைப் பெற, நெல் பயிரிடப்பட்டு 14 நாட்களில் உரமிட வேண்டும். மானியம் இல்லாததால் உரங்களை வாங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர் என ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
25 690723f808229
ஏனையவை

நைஜீரியாவில் ஐ.எஸ். குழுவினர் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் – ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு!

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் இயங்கி வரும் ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதக் குழுவினருக்கு எதிராக அமெரிக்க இராணுவம்...

14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...