12 12
ஏனையவை

இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

Share

இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் முன்னெதிர்வு கூறப்பட்டதை விடவும் மிகவேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, இவ்வருடம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான முதலாம் காலாண்டில் 5.3 சதவீதமாக பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தி, இரண்டாம் காலாண்டில் 4.7 சதவீதமாக பதிவாகியிருக்கின்றது.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது கணிசமானளவு அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இவ்வருடத்தின் ஏப்ரல் முதல் ஜுன் வரையான 3 மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.7 சதவீதமாக அதிகரித்திருப்பதன் மூலம், பொருளாதாரம் மிகவேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேபோன்று இக்காலப்பகுதியில் விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகள் முறையே 1.7 சதவீதம், 10.9 சதவீதம் மற்றும் 2.5 சதவீதமாக உயர்வடைந்திருக்கின்றன.

இது இவ்வாறிருப்பினும் எதிர்வரும் 21 ஆம் திகதி ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் பின்னணியில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 302 ரூபாவாக பதிவாகியிருக்கிறது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...