சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தும் அட்லீ!! வெளியான தகவல்?
2013 -ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லீ. இப்படத்தை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து பாப்புலர் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
தற்போது அட்லீ பாலிவுட் சினிமாவின் பாஷாவாக இருக்கும் ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் ஜவான் படத்திற்கு அடுத்தபடியாக அட்லீ சன் பிக்சர்ஸ் நிறுவனதின் கீழ் படம் எடுக்க போகிறாராம்.
இப்படத்திற்காக அட்லீக்கு ரூபாய் 50 கோடி சம்பளம் பேசி 10 கோடி வரை அட்வான்ஸ் தொகையை கொடுத்து வைத்திருக்கிறதாம். ஜவான் படத்திற்காக அட்லீ ரூபாய் 30 கோடி சம்பளம் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a comment