6 40
ஏனையவை

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரால் கனடாவிற்கு ஏற்பட்ட நெருக்கடி

Share

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரால் கனடாவிற்கு ஏற்பட்ட நெருக்கடி

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை (Sri Lanka) தமிழர் ஒருவருக்கு கனடிய (Canada) அரசாங்கம் புதிய கடவுச்சீட்டு வழங்கியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் கனடிய குடிவரவு மற்றும் குடியகல்வு முறையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாக கொண்ட தேசிங்கராசன் ராசையா என்பவருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளமையே இவ்வாறு சர்ச்கைக்குரிய விடயமாக மாறியுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குறித்த நபர் தொடர்பில் விசாரணை செய்த போது அவரிடம் புதிய கடவுச்சீட்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டவிரோத ஆட்கடத்தல் வலையமைப்பிற்கு குறித்த நபர் தலைமை தாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இலங்கையர்களை கனடாவிற்கு கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடர்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டிருந்த நிலையில் அவரது கால்களுக்கு இலத்திரன்கள் பிரேஸ்லெட் ஒன்று போடப்பட்டு கடுமையான நிபந்தனை அடிப்படையில் வீட்டில் வசிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அத்தோடு, தேசிங்கராசன் தனது கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டு உத்தரவிட்டு இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே தேசிங்குராசன் விடுதலை செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, இலங்கையர் ஒருவரை அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு அழைத்து வந்த குற்றச்சாட்டில் தேசிங்குராசனுக்கு 15 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியில் அவர் தொடர்ந்தும் அதே குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த மே மாதம் மீண்டும் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில், இந்த இவர் எவ்வாறு இரண்டாவது தடவையாக கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

மேலும், தேசிங்குராசனுக்கு எவ்வாறு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது என்பது குறித்து குடிவரவு அமைச்சர் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...