16 17
ஏனையவை

முன்னாள் எம்.பி. சிறீரங்கா சி.ஐ.டியில் முன்னிலை

Share

முன்னாள் எம்.பி. சிறீரங்கா சி.ஐ.டியில் முன்னிலை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா (Sri Ranga Jeyaratnam) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (Criminal Investigation Department) பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள சுஜீவ சேனசிங்கவின் V8 வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் மேலும் தெரியவருகையில், சட்டவிரோதமாக பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் (Sujeewa Senasinghe) 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனம் தொடர்பான பகுப்பாய்வாளரின் அறிக்கை நீதிமன்றத்திற்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

இந்தநிலையில், இன்று சுஜீவ சேனசிங்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, வாகனம் தொடர்பில் செட்டிகுளம் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்த போதிலும், குறித்த வழக்கு ஏற்கனவே முடிவுக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த வாகனத்தை சுஜீவ சேனசிங்கவிடம் விடுவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கோட்டை நீதவான், அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை இன்னமும் நீதிமன்றத்திற்கு கிடைக்கப்பெறாத காரணத்தினால் வழக்கை நவம்பர் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இவ்வாறான நிலையிலேயே குறித்த சொகுசு வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சிறீரங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...