உலகம்ஏனையவைசெய்திகள்

சீமானுடன் சேர்ந்த புகைப்படத்தால் சர்ச்சை.., ஆர்ச் முன்னாடியா செல்ஃபி எடுத்திருக்கிறேன் என கஸ்தூரி காட்டம்

vikatan 2020 09 9a098bc1 057c 44c8 9925 dfde17dde293 158542 thumb
Share

சீமானுடன் சேர்ந்த புகைப்படத்தால் சர்ச்சை.., ஆர்ச் முன்னாடியா செல்ஃபி எடுத்திருக்கிறேன் என கஸ்தூரி காட்டம்

சீமானுடன் சேர்ந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சித்து வரும் திமுகவினருக்கு நடிகை கஸ்தூரி காட்டமாக பதில் அளித்துள்ளார்.

சேலம் மாடர்ன்ஸ் தியேட்டர் விவகாரம் குறித்து பலரும் விமர்சனங்கள் செய்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரியும் திமுகவை விமர்சித்தார்.

அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “சுதந்திரத்திற்கு முன்னாடியே கட்டப்பட்ட நுழைவு வாயில். இத்தனை வருடம் கழித்து இன்று திமுக அரசின் கண்ணை உறுத்துகின்றது. மந்திரிக்குமாரி உள்ளிட்ட கலைஞரின் பல வெற்றிகளை தினம்தோறும் பறை சாற்றும் நினைவு வாயிலை விட..” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமானுடன் நடிகை கஸ்தூரி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து திமுகவினர் கிண்டலடித்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில், “இந்த புகைப்படத்தை தான் மூன்று நாட்களாக தூக்கிட்டு அலைகிறார்கள் D stock மடசாம்பிராணிஸ்.

இது 4 வருடம் முன்னாடி நானே share பண்ண ஒரு சாதா selfie. இதில் பதற்றதுக்கு என்ன இருக்கு? நான் என்ன ஆர்ச் முன்னாடியா நின்று செல்ஃபி எடுத்திருக்கிறேன்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த புகைப்படமானது 2019 -ம் ஆண்டு சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக, 25 ஆண்டுக்கால நட்பே, நூறாண்டு வாழி பிறந்தநாள் வாழ்த்துகள் என கஸ்தூரி பகிர்ந்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...