7 22
ஏனையவை

கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை சமகால அடிமைத்தனமென விமர்சித்த ஐ.நா.

Share

கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை சமகால அடிமைத்தனமென விமர்சித்த ஐ.நா.

ஐக்கிய நாடுகள் சபை (United Nations) கனடாவின் தற்காலிக தொழிலாளர் திட்டத்தை ‘நவீன அடிமைத்தனத்தின் ஓர் உருவம்’ என்று சாடியுள்ளது.

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா தனது ஆய்வின் இறுதி அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களை தற்காலிகமாக வேலைக்கு சேர்க்கும் திட்டம், நீண்ட காலமாக விவசாயத் துறையில் முதலிலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது, குறைந்த சம்பளத் தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் அதிகமாக அனுமதிக்கப்படுவதால் இது புதிய விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், குறைந்த சம்பளத் திட்டத்தின் கீழ் 28,730 பேரை அரசு அனுமதித்துள்ளது. இது 2023-ஆம் ஆண்டில் இருந்ததை விட 25% அதிகம் ஆகும்.

மேலும், இது 2016-ஆம் ஆண்டிலிருந்து பதிவான மிக உயர்ந்த காலாண்டு எண்ணிக்கையாகும்.

இந்த திட்டத்தின் கீழ் பணியாளர்கள் அடையாள ஆவணங்களை பறிமுதல் செய்யப்படுதல், குறைவான சம்பளம் வழங்குதல், உடல்தொல்லைகள், மனஅழுத்தம், அதிக வேலை நேரம் போன்ற பல்வேறு துன்பங்களை எதிர்கொள்கிறார்கள்.

பெண்கள் பாலியல் தொல்லைகள், சுரண்டல் போன்ற நிகழ்வுகளைச் சந்திக்கிறார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் திறந்த வேலை அனுமதிக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்றாலும், நடைமுறையில் இது பலருக்கும் சாத்தியமில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 5
ஏனையவை

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்: டிசம்பர் 30-இல் தேடல் தொடக்கம்!

காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் (பத்து ஆண்டுகள்) மேலாகியும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய வானூர்தியை (MH370) தேடும்...

images 4
ஏனையவை

தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்: 22 மாவட்டங்கள் அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பு!

‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள்...

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 02 டிசம்பர் 2025 : சுப பலன்கள் கிடைக்கும் ராசிகள்

இன்று டிசம்பர் 2, 2025 கார்த்திகை மாதம் 16ம் தேதி செவ்வாய் கிழமை, மேஷ ராசியில்...

Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...