25 4
ஏனையவை

கனடாவில் வேலை நிறுத்தத்தில் குதித்தனர் தபால் ஊழியர்கள்

Share

கனடாவில் வேலை நிறுத்தத்தில் குதித்தனர் தபால் ஊழியர்கள்

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கனடா(canada) தபால் தொழிற்சங்கங்கள் வெள்ளிக்கிழமை (15) வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 55,000 பேர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேலை நிறுத்தம் பிஸியான விடுமுறை காலத்திற்கு முன்னதாக விநியோகங்களை கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 6 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப அதிக ஊதியம் கோரி வருகின்றனர்.

சேவைக்கு ஏற்ற ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். நான்கு ஆண்டுகளில் தபால் ஊழியர்களுக்கு 11.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

எனினும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது போதாது எனக் கூறப்படுகிறது. ஆனால் 22 சதவீத ஊதிய உயர்வு, ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, சிறந்த சுகாதார பாதுகாப்பு மற்றும் இதர சலுகைகள் ஆகியவற்றை தொழிற்சங்கம் கேட்டுள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...