tamilni 3 scaled
ஏனையவை

பிரித்தானியா நாடாளுமன்ற தேர்தல்! தமிழ் உறவுகளுக்கு கோரிக்கை வைத்த சீமான்

Share

பிரித்தானியா நாடாளுமன்ற தேர்தல்! தமிழ் உறவுகளுக்கு கோரிக்கை வைத்த சீமான்

பிரித்தானியாவில் வரும் ஜூலை 4 -ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் தற்போது பிரதமராக ரிஷி சுனக் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அங்கு வரும் ஜூலை 4 -ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

அங்கு மொத்தம் 650 தொகுதிகள் உள்ள நிலையில் எந்த கட்சி 326 இடங்களில் வெற்றி பெருகிறதோ அந்த கட்சியே ஆட்சி அமைக்கின்ற அதிகாரத்தை பெறும்.

ஆனால், எந்த கட்சியும் 326 இடங்களில் வெற்றிப்பெறவில்லை என்றால், தொங்கு நாடாளுமன்ற நடைமுறை பின்பற்றப்படும். அதாவது பிரதமர் பதவியில் நீடிக்கும் நபருக்கே முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும்.

இந்த தேர்தலில் சென்னை கொளத்தூரைஸ்ரீ பூர்வீகமாக கொண்ட ஆனந்த் குமார் என்ற தமிழர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் உறவுகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பிரிட்டன் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் என்னருந்தமிழ் உறவுகளுக்கு வெற்றி வாழ்த்துகள்!

ஜூலை 04 அன்று நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவில், என் உயிர்க்கினிய பிரிட்டன் வாழ் தமிழர்கள் அனைவரும், வரலாறு தந்துள்ள இப்பெரும் வாய்ப்பைத் தவறவிடாது பயன்படுத்தி நமது உறவுகளை வெற்றிபெறச் செய்து தமிழ்ப்பேரினத்தின் ஓர்மையையும், வலிமையையும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டுங்கள்!

மறக்காமல் வாக்குச்செலுத்துங்கள்! நாம் மானத்தமிழர் என்பதை உலகிற்குக் காட்டுங்கள்!இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! நாம் தமிழர்!” என்று கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...