images 20
ஏனையவை

உலகை அச்சுறுத்தி வரும் நோய்த்தாக்கம் : விதிக்கப்பட்ட இறக்குமதி தடை

Share

உலகை அச்சுறுத்தி வரும் நோய்த்தாக்கம் : விதிக்கப்பட்ட இறக்குமதி தடை

பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் விலங்குகள் அல்லது விலங்குகளுக்கான பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை இன்று(23.06.2024) திணைக்களத்தின் தலைமை இயக்குநர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக பல நாடுகளில் பதிவாகியுள்ள ஏவியன் இன்புளுவன்சா A(H5N1) வைரஸ் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டைப் பாதுகாக்கவே கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், அமெரிக்காவின் பல மாநிலங்களில் முதன்முறையாக கால்நடைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே இது ஒரு தீவிரமான நிலைமை என்றும் கொத்தலாவல குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தற்போது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் எனவும் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள இயக்குநர் ஹேமாலி கேட்டுக்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...

10 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் வெற்றிடமாகவுள்ள, மூன்று வேலைப் பிரிவுகளுக்கான பதிவு இன்று(27) அதிகார பூர்வமாக ஆரம்பமாகும்...