5 46
ஏனையவை

ஏ.ஆர் ரஹ்மான் – சாயிரா திருமணம் எப்படி நடந்தது தெரியுமா! காதல் திருமணம் இல்லை

Share

ஏ.ஆர் ரஹ்மான் – சாயிரா திருமணம் எப்படி நடந்தது தெரியுமா! காதல் திருமணம் இல்லை

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் வேண்டும் இந்தியாவுக்கே பெருமை தேடி தந்தவர். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கும் அவரது பாடல்கள் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன.

குறிப்பாக அவரது காதல் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றன.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாயிரா தான் 29 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக அறிவித்து இருக்கிறார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

1995ல் தான் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாயிரா திருமணம் நடைபெற்றது. காதல் பாடல்களுக்கு பெயர் பெற்ற ரஹ்மான் காதலித்து எல்லாம் திருமணம் செய்யவில்லை, ‘எனக்கு ஒரு பொண்ணு பாருங்க’ என அவரது அம்மாவிடம் கூறி இருக்கிறார். அவர் பார்த்து ஏற்பாடு செய்தது தான் இந்த திருமணம்.

ரஹ்மானுக்கு அப்போது 29 வயது, அதனால் இது தான் சரியான நேரம் என அவர் முடிவு எடுத்தாராம். அப்போது ரோஜா, பம்பாய் அவர் இசையமைப்பில் பாடல்கள் பெரிய ஹிட் ஆகி இருந்த நேரம் அது.

ஒரு பெண்ணை தேடி காதலித்து திருமணம் செய்து கொள்ள எல்லாம் எனக்கு நேரம் இல்லை, அதனால் தான் அம்மாவிடம் அப்படி கூறினேன் என ரஹ்மானே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

எப்படிப்பட்ட பெண் வேண்டும் என அம்மா கேட்டபோது ‘சிம்பிளான, எனக்கு எந்த பிரச்சனையும் கொடுக்காத ஒரு பெண் வேண்டும். அப்போது தான் நான் மியூசிக் போட முடியும்’ என ரஹ்மான் கூறினாராம்.

ரஹ்மானின் அம்மா ஒரு தர்காவின் அருகில் தான் சாயிராவின் சகோதரியை சந்தித்து இருக்கிறார். அவர்கள் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கின்றனர்.

ரஹ்மான் சாயிராவை முதலில் பார்த்தபோது ‘திருமணம் செய்து கொள்ள விருப்பமா, இல்லை வேறு எதாவது மனதில் இருக்கிறதா’ என ஒரே ஒரு கேள்வியை தான் கேட்டாராம். அவர் சரி என சொன்னபிறகு குடும்பத்தினர் ஏற்பாட்டில் திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது.

29 வருடம் தொடர்ந்த அவர்களது திருமண வாழ்க்கை, தற்போது விவாகரத்து மூலம் முடிவுக்கு வந்து இருக்கிறது.

Share
தொடர்புடையது
19 4
ஏனையவை

சிறைச்சாலை அதிகாரிகள் பலருக்கு அதிரடி இடமாற்றம்!

சிறைச்சாலைத் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் பலருக்கும் அவர்கள் பணியாற்றி இடங்களில் இருந்து அதிரடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...