4 23
ஏனையவை

அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட இனரீதியான குற்றச்சாட்டு: அநுர தரப்பு பதிலடி

Share

அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட இனரீதியான குற்றச்சாட்டு: அநுர தரப்பு பதிலடி

தேசிய மக்கள் சக்தி தரப்பினால் பெண்களின் திருமண வயது 18ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டமையானது பெண்களின் பாதுகாப்புக்காகவே என அக்கட்சியின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“தற்போது தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளராக உள்ள சரோஜா போல்ராஜ் 2019ஆம் ஆண்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் பெண்களின் திருமண வயதை 18ஆக அதிகரிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர் இந்த கருத்தை கூறியிருந்தார். எனினும், ஏனைய அரசியல் கட்சிகள் இதனை தேசிய மக்கள் சக்திக்கு இனவாத சாயம் பூச பயன்படுத்திக் கொண்டனர். இதனால் இஸ்லாமியர்கள் மத்தியில் சலசலப்பொன்று ஏற்பட்டிருந்தது.

அத்துடன், கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் இன ரீதியான முறுகலை ஏற்படுத்தியே அரசியல் செய்தனர். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அதற்கு இடமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...