4 23
ஏனையவை

அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட இனரீதியான குற்றச்சாட்டு: அநுர தரப்பு பதிலடி

Share

அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட இனரீதியான குற்றச்சாட்டு: அநுர தரப்பு பதிலடி

தேசிய மக்கள் சக்தி தரப்பினால் பெண்களின் திருமண வயது 18ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டமையானது பெண்களின் பாதுகாப்புக்காகவே என அக்கட்சியின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“தற்போது தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளராக உள்ள சரோஜா போல்ராஜ் 2019ஆம் ஆண்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் பெண்களின் திருமண வயதை 18ஆக அதிகரிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர் இந்த கருத்தை கூறியிருந்தார். எனினும், ஏனைய அரசியல் கட்சிகள் இதனை தேசிய மக்கள் சக்திக்கு இனவாத சாயம் பூச பயன்படுத்திக் கொண்டனர். இதனால் இஸ்லாமியர்கள் மத்தியில் சலசலப்பொன்று ஏற்பட்டிருந்தது.

அத்துடன், கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் இன ரீதியான முறுகலை ஏற்படுத்தியே அரசியல் செய்தனர். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அதற்கு இடமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...

images 7 2
ஏனையவை

டெல்லி கார் வெடிப்பு ‘தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்’: இந்தியாவுக்கு உதவியளிக்கத் தயார் என அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை, ஒரு “தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்”...