5 30
ஏனையவை

இலங்கை வரலாற்றில் பாரிய மாற்றம் – அநுரவுக்கு வரலாறு காணாத வெற்றி

Share

இலங்கை வரலாற்றில் பாரிய மாற்றம் – அநுரவுக்கு வரலாறு காணாத வெற்றி

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தனிக்கட்சியான 2/3 என்ற பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு தனிக் கட்சி இதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் எந்தவொரு பிரேரணை மற்றும் சட்டங்கள் எந்தவொரு கட்சியின் ஆதரவின்றி நிறைவேற்ற முடியும்.

இலங்கை முழுவதும் நடைபெற்ற தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மட்டும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி 107 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 28 ஆசனங்களையும், இலங்கை தமிழரசு கட்சி 6 ஆசனங்களை, புதிய ஜனநாயக முன்னணி 3 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2 ஆசனங்களை, முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...