5 35
ஏனையவை

16 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

16 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த படமும் செய்திராத வசூல் சாதனையை படைத்துள்ளது அமரன். ரூ. 100 கோடியை மூன்று நாட்களில் கடந்தது, ரூ. 200 கோடியை பத்து நாட்களில் கடந்தது என தொடர் சாதனைகளை இப்படம் படைத்து வருகிறது.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படம், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மேலும் கமல் ஹாசன் இப்படத்தை தயாரித்து இருந்தார்.

இந்த நிலையில் 16 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள அமரன் திரைப்படம், இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 280 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் 16 நாட்களில் ரூ. 135 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஓரிரு நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைக்கும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...