3 39
ஏனையவை

சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அவரே உறுதிப்பட கூறிய தகவல்

Share

சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அவரே உறுதிப்பட கூறிய தகவல்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் தமிழில் சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துள்ளார்.

ஸ்ரேயா கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” என்ற படத்தில் நடித்தார். பின் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி கொண்டார்.

இந்நிலையில், சுமார் 7 வருடங்களுக்கு பின் மீண்டும் சூர்யாவின் 44 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இது தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது இதனை நடிகை ஸ்ரேயா சரண் அவரே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார்.

அதில், “நான் சூர்யாவின் 44 – வது படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளேன். அந்த பாடல் மிகவும் அருமையாக வந்துள்ளது. விரைவில் வெளியாகும்” என்று கூறியுள்ளார். ஸ்ரேயா சூர்யாவுடன் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...