3 39
ஏனையவை

சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அவரே உறுதிப்பட கூறிய தகவல்

Share

சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அவரே உறுதிப்பட கூறிய தகவல்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் தமிழில் சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துள்ளார்.

ஸ்ரேயா கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” என்ற படத்தில் நடித்தார். பின் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி கொண்டார்.

இந்நிலையில், சுமார் 7 வருடங்களுக்கு பின் மீண்டும் சூர்யாவின் 44 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இது தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது இதனை நடிகை ஸ்ரேயா சரண் அவரே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார்.

அதில், “நான் சூர்யாவின் 44 – வது படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளேன். அந்த பாடல் மிகவும் அருமையாக வந்துள்ளது. விரைவில் வெளியாகும்” என்று கூறியுள்ளார். ஸ்ரேயா சூர்யாவுடன் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...