7 44
ஏனையவை

முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் குறித்து விசேட ஆய்வு

Share

முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் குறித்து விசேட ஆய்வ

முன்னாள் ஜனாதிபதிகள் வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பான மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச (Mahinda Rajapaksa) வசிக்கும் தற்போதைய இல்லத்தில் கடந்த வாரம் மதிப்பீட்டுத் திணைக்களம் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தது.

அதன் பிரகாரம் மகி்ந்த ராஜபக்‌ச வசிக்கும் இல்லத்தின் தற்போதைய வாடகைப் பெறுமதி 46 லட்சம் ரூபாய் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

அதே ​போன்று ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க (Chandrika Kumaratunga) , மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) , கோட்டாபய ராஜபக்‌ச (Gotabaya Rajapaksa) மற்றும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் துணைவியார் ஹேமா பிரேமதாச ஆகியோர் வசிக்கும் இல்லங்கள் குறித்தும் மதிப்பீட்டுத் திணைக்களத்தின் மூலமாக ஆய்வொன்றை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

அதன்பின் பெரும்பாலும் அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்படலாம் என்று தெரிய வருகின்றது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...