திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள 3,000 மைல்கள் பயணித்த பெண்
ஏனையவை

திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள 3,000 மைல்கள் பயணித்த பெண்

Share

திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள 3,000 மைல்கள் பயணித்த பெண்

இந்திய வம்சாவளி பெண் ஒருவர் தமது நண்பரின் திருமணத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, 3,000 மைல்கள் பயணித்து ஸ்கொட்லாந்து சென்ற நிலையில், ஏற்பட்ட சுவாரசிய திருப்பம் குறித்து அவரே பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் குடியிருக்கும் ஆர்த்தி மாலா என்ற இந்திய வம்சாவளி பெண் 3,000 மைல்கள் பயணித்து ஸ்கொட்லாந்து சென்றுள்ளார். கிளாஸ்கோவில் வாடகை டாக்ஸியை அமர்த்திக் கொண்டு திருமணம் நடக்கவிருக்கும் அரங்கிற்கும் சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சென்ற போது தான் புரிந்து கொண்டார், அது தமது நண்பரின் திருமண அரங்கு அல்ல என்பதை. தனது நண்பர் கவுரவ் என்பவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஆர்த்தி மாலா சனிக்கிழமை கிளாஸ்கோவிற்கு சென்றுள்ளார்.

ஆனால் அந்த அரங்கத்திற்கு சென்ற பின்னர் தான் அந்த விழாவானது கெய்த்லின் மற்றும் ஸ்டீபன் என்பவர்களின் திருமணம் என்று அவர் தெரிந்து கொண்டார்.

சில சடங்குகளை தவறவிட்டதாக
இதனிடையே, விசாரித்ததில் அவரது நண்பரின் திருமணமானது அங்கிருந்து ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ள இன்னொரு அரங்கத்தில் நடைபெறுவதாக அறிந்துகொண்டார்.

உடனடியாக அங்கிருந்து இன்னொரு டாக்ஸியில் அந்த அரங்கம் சென்றுள்ளார் ஆர்த்தி மாலா. ஆனால் தாமதமானதால் குறிப்பிட்ட சில சடங்குகளை அவர் தவறவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...