அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் வெடித்த மோதல்!! சுட்டுத்தள்ளப்பட்ட துப்பாக்கி குண்டுகள்
ஏனையவை

அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் வெடித்த மோதல்!! சுட்டுத்தள்ளப்பட்ட துப்பாக்கி குண்டுகள்

Share

அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் வெடித்த மோதல்!! சுட்டுத்தள்ளப்பட்ட துப்பாக்கி குண்டுகள்

அமெரிக்காவின் சியாட்டில் உள்ள வணிக வளாகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் சியாட்டிலின் ரெய்னியர் கடற்கரை பகுதிக்கு அருகில் அமைந்துள்ள வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இளைஞர்களுக்கு மத்தியில் பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியது.

இதில் டஜன் டஜனான துப்பாக்கி குண்டுகள் சுட்டு தள்ளப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உணவுகள், ஆடைகள் மற்றும் பொம்மைகள் வழங்கும் சமூக நலன் கூட்டத்தில் கலந்து கொண்ட 20 வயதுடைய இளைஞர்கள் இடையே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் துப்பாக்கி சூடு நடைபெற்ற 9200 பிளாக் ரெய்னியர் அவென்யூ-க்கு வந்த பொலிஸார், சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.

இதில் ஒருவர் பலத்த காயங்களுடன் ஹார்பர்வியூ மருத்துவ மையத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் இரண்டு ஆண்களும் மற்றும் இரண்டு பெண்களும் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த சம்பவம் குறிவைத்த நபர்கள் மீது நடத்தப்பட்டதா அல்லது தற்செயலாக அவர்கள் பாதிக்கப்பட்டார்களா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இளைஞர் குழுக்களுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த மோதலுக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...