18 12
ஏனையவை

நாடாளுமன்றத்திற்கு தெரிவான மலையகத் தமிழர்கள் 8 பேர்

Share

நாடாளுமன்றத்திற்கு தெரிவான மலையகத் தமிழர்கள் 8 பேர்

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 8 உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது.

160 நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து 196 பேர் நேரடியாகவும் 29 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட உள்ளதுடன், 17.1 மில்லியன் மக்கள் இம்முறை வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா (Nuwara Eliya), பதுளை (Badulla), இரத்தினபுரி (Ratnapura) ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏழு மலையகத் தமிழர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட கிஷ்ணன் கலைச்செல்வி 33346 வாக்குளை பெற்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்ப்பில் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) 46,438 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பழனி திகாம்பரம் (Palani Digambaran) 48018 வாக்குளை பெற்றும், வே.இராதாகிருஷ்ணன் (Velusami Radhakrishnan) 42,273 வாக்குகளை பெற்றும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட கிட்ணன் செல்வராஜ் 60041 வாக்குளை பெற்றும் அம்பிகா சாமுவேல் 58201 வாக்குகளை பெற்றும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

அதுபோன்று இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சுந்தரலிங்கம் பிரதீப்பும், மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட சரோஜா போல்ராஜும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.

தேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள ராமலிங்கம் சந்திரசேகரனும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினால் மொத்தமாக 8 மலையக எம்.பிகள் இம்முறை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவர்.

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...