கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய பகுதியிலுள்ள 3 சுப்பர் மார்க்கெட் கிளைகளுக்கு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் தலா 200,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கடந்த 18ஆம் திகதியன்று இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு பகுதியாக நுகர்வோர் விவகார ஆணையம் இந்த சோதனைகளை நடத்தியது.
கடந்த 2 மாதங்களில் நாடு முழுவதும் 187க்கும் மேற்பட்ட சுப்பர் மார்க்கெட்களில் நுகர்வோர் அதிகார சபை பரிசோதனைகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.