16 19
ஏனையவை

சீகிரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு

Share

சீகிரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க சீகிரியா(Sigiriya) பாறைக் கோட்டை இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் மறுத்துள்ளது.

சீகிரியா பாறைக் கோட்டையை சுற்றுலாப் பயணிகள் இரவில் பார்வையிட முடியும் என தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயங்களை பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீகிரியா பாறைக் கோட்டையை இரவில் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் இரவில் ஒளிரும் சீகிரியாவின் படமும் போலியானது என்று அமைச்சகம் கூறியுள்ளது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...