7 39
ஏனையவை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட இறுதி அறிவிப்பு

Share

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட இறுதி அறிவிப்பு

மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பிலிருந்து இன்றையதினமும் (21) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறாவிட்டால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

35 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர எழுத்து மூலம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், சுமார் 80 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பிலிருந்து நேற்றைய தினம் (20) வெளியேறியுள்ளனர்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருப்புகளில் தொடர்ந்தும் தங்குவதற்கு பொதுத்தேர்தல் நடைபெற்ற கடந்த 14 ஆம் திகதி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இதன்படி, கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இந்த வீட்டுத் தொகுதியில் தங்கும் தகுதி உள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீடுகளை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க இந்த நாட்களில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருபு்பு தொகுதியில் சுமார் 110 வீடுகள் உள்ளன.

அதன் அடிப்படையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக முதலில் கோரிக்கை சமர்ப்பிக்கப்படும் வரிசையிலேயே வீடுகள் வழங்கப்படும் என நாடாளுமன்ற சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...