6 1 1
ஏனையவை

அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய அமைச்சரின் எதிர்பார்ப்பு

Share

அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய அமைச்சரின் எதிர்பார்ப்பு

நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க அரச சேவையாளர்களின் ஒத்துழைப்பை முழுமையாக எதிர்பார்த்துள்ளோம் என விவசாயத்துறை மற்றும் கால்நடை அமைச்சர் கே.டி லால் காந்த(K.D.Lalkantha) தெரிவித்துள்ளார்.

விவசாயத்துறை அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளார்கள். எமது அரசாங்கத்தில் அனைத்து இன மக்களும் பங்காளர்களாகியுள்ளமை கட்சி என்ற ரீதியில் நாங்கள் பெற்றுக் கொண்ட மாபெரும் வெற்றியாகும். தேர்தல் பெறுபேற்றின் வெற்றியை காட்டிலும் அது அப்பாற்பட்டது.

அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் அபிலாசைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவோம். பொருளாதார ரீதியில் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு முறையான கொள்கை திட்டங்களுடன் தீர்வு காணப்படும்.என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1 11
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகின் முதல் ட்ரோன் போர்! அணு ஆயுத எச்சரிக்கை விளிம்பில் இந்தியா – பாகிஸ்தான்

அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உலகின் முதல் ட்ரோன் போர் தெற்காசியாவில் வெடித்துள்ளது....

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 09 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.05. 2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...