5 46
ஏனையவை

ஏ.ஆர் ரஹ்மான் – சாயிரா திருமணம் எப்படி நடந்தது தெரியுமா! காதல் திருமணம் இல்லை

Share

ஏ.ஆர் ரஹ்மான் – சாயிரா திருமணம் எப்படி நடந்தது தெரியுமா! காதல் திருமணம் இல்லை

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் வேண்டும் இந்தியாவுக்கே பெருமை தேடி தந்தவர். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கும் அவரது பாடல்கள் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன.

குறிப்பாக அவரது காதல் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றன.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாயிரா தான் 29 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக அறிவித்து இருக்கிறார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

1995ல் தான் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாயிரா திருமணம் நடைபெற்றது. காதல் பாடல்களுக்கு பெயர் பெற்ற ரஹ்மான் காதலித்து எல்லாம் திருமணம் செய்யவில்லை, ‘எனக்கு ஒரு பொண்ணு பாருங்க’ என அவரது அம்மாவிடம் கூறி இருக்கிறார். அவர் பார்த்து ஏற்பாடு செய்தது தான் இந்த திருமணம்.

ரஹ்மானுக்கு அப்போது 29 வயது, அதனால் இது தான் சரியான நேரம் என அவர் முடிவு எடுத்தாராம். அப்போது ரோஜா, பம்பாய் அவர் இசையமைப்பில் பாடல்கள் பெரிய ஹிட் ஆகி இருந்த நேரம் அது.

ஒரு பெண்ணை தேடி காதலித்து திருமணம் செய்து கொள்ள எல்லாம் எனக்கு நேரம் இல்லை, அதனால் தான் அம்மாவிடம் அப்படி கூறினேன் என ரஹ்மானே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

எப்படிப்பட்ட பெண் வேண்டும் என அம்மா கேட்டபோது ‘சிம்பிளான, எனக்கு எந்த பிரச்சனையும் கொடுக்காத ஒரு பெண் வேண்டும். அப்போது தான் நான் மியூசிக் போட முடியும்’ என ரஹ்மான் கூறினாராம்.

ரஹ்மானின் அம்மா ஒரு தர்காவின் அருகில் தான் சாயிராவின் சகோதரியை சந்தித்து இருக்கிறார். அவர்கள் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கின்றனர்.

ரஹ்மான் சாயிராவை முதலில் பார்த்தபோது ‘திருமணம் செய்து கொள்ள விருப்பமா, இல்லை வேறு எதாவது மனதில் இருக்கிறதா’ என ஒரே ஒரு கேள்வியை தான் கேட்டாராம். அவர் சரி என சொன்னபிறகு குடும்பத்தினர் ஏற்பாட்டில் திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது.

29 வருடம் தொடர்ந்த அவர்களது திருமண வாழ்க்கை, தற்போது விவாகரத்து மூலம் முடிவுக்கு வந்து இருக்கிறது.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...