4 37
ஏனையவை

அநுர அரசில் ராஜாங்க அமைச்சர்களுக்கு இடமில்லை

Share

அநுர அரசில் ராஜாங்க அமைச்சர்களுக்கு இடமில்லை

முன்னைய அரசாங்கங்களின் நடைமுறையில் இருந்து விலகி, புதிய அரசாங்கம் ராஜாங்க அமைச்சர்களை நியமிக்க மாட்டாது, ஆனால் அதற்கு பதிலாக 26-28 பிரதி அமைச்சர்களை ஓரிரு நாட்களில் நியமிக்கும் என்று அமைச்சர் ஒருவர் நேற்று(18) தெரிவித்தார்.

புதிதாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ(Dr. Nalinda Jayatissa), பிரதி அமைச்சர்கள் நியமனம் விரைவில் இடம்பெறும் என கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்னதாக நாட்டிற்கு முன்வைக்கப்பட்ட கொள்கை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சில அமைச்சரவை இலாகாக்களுக்கு பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்களே தவிர அனைத்து அமைச்சுக்களுக்கும் நியமிக்கப்படமாட்டார்கள். அமைச்சின் செயலாளர்களும் மாற்றப்படுவார்கள், மீண்டும் நியமிக்கப்படுவார்கள் அல்லது புதிதாக நியமிக்கப்படுவார்கள், ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், நிதி அமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவைத்(Mahinda Siriwardana) தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத்(vijitha hearth) நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இன்று(19) தனது அலுவலகத்தில் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக கலாநிதி ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...