6 38
ஏனையவை

பரபரப்பாக பேசப்படும் நயன்தாரா-தனுஷ் பிரச்சனை குறித்து ஆர்.ஜே.பாலாஜி.. தெளிவா இருக்காரு

Share

பரபரப்பாக பேசப்படும் நயன்தாரா-தனுஷ் பிரச்சனை குறித்து ஆர்.ஜே.பாலாஜி.. தெளிவா இருக்காரு

கடந்த சில தினங்களாகவே தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் நயன்தாரா-தனுஷ் பிரச்சனை தான்.

நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு, நயன்தாரா பியாண்ட் தி பேரி டேல் என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்று உருவானது. இது நேற்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த ஆவணப்படத்தின் டிரைலரில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடித்தான் திரைப்படத்தின் சிறுகாட்சி இடம்பெற்றிருந்தது.

அந்த சின்ன வீடியோவிற்காக தனுஷ் ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு தன்மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பால் தனுஷ் பழிவாங்குகிறார் என நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்தார்.

தனுஷ்-நயன்தாரா பிரச்சனை குறித்து பலரும் பேசிவர அண்மையில் ஆர்.ஜே.பாலாஜிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், நானும் அதை இணையத்தில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்கு கொண்டாட்டம் என்பதுபோல ஏதோ ஒன்று நடக்கிறது.

அனைவரும் பார்க்கிறோம், அதைப்பற்றி பேசுகிறோம். இதில் கருத்து தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை, தனுஷே அதற்கு பதில் சொல்லவில்லை, நாம் என்ன சொல்ல, அவர்கள் இருவருமே அதை பேசிக்கொள்வார்கள் என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...