1 55
ஏனையவை

அமைச்சரவையில் கிழக்குமாகாணத்தை புறக்கணித்த அநுர அரசு

Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால்(anura kumara dissanayake) இன்று (18) நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாணம்(eastern province) புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அமைச்சர் பதவிகளை மேல் மாகாணம் கொண்டுள்ளது. இதன்படி, எண்ணிக்கை ஆறு எனவும், தென் வடமேற்கு, சப்ரகமுவ மாகாணங்களுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளும் வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு தலா ஒரு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டுள்ள ராமலிங்கம் சந்திரசேகரன் நீண்டகாலமாக வடமாகாணத்திற்கான கட்சியை ஒழுங்கமைத்து வருவதால் இந்த நியமனம் வடக்கிற்கான நியமனமாகவே கருதமுடியும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சரவைக்கு அமைச்சுப் பதவி கிடைக்காவிட்டாலும் எதிர்காலத்தில் பிரதி அமைச்சர்களை நியமித்து அந்த வெற்றிடத்தை நிரப்பப்படும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இந்த அமைச்சரவையில் குறிப்பிடத்தகுந்த விடயமாக , தமிழ்பிரதிநிதித்துவத்திற்கு, ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டாலும், முஸ்லிம் சமூகத்திற்கு எவரும் நியமிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...