10 22
ஏனையவை

எல்லையற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழல்: அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share

எல்லையற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழல்: அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இதற்கு முன்னர் எந்த அரசாங்கத்திற்கும் கிடைக்காத அதிகாரம் திசைக்காட்டிக்கு கிடைத்திருந்தாலும், எல்லையற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த நிலைமைக்கு வராது என்பதே மக்களின் நம்பிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்கள் கொடுத்த அதிகாரத்தை கவனமாக பயன்படுத்துவோம் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் கூறியுள்ளமை பாராட்டத்தக்கது எனவும் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

அத்தோடு, தற்போதைய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு அனுபவம் இல்லையென்றாலும், திருமணத்திற்கு முன் சென்று அனுபவத்தைப் பெறுகிறார்களா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

புதிய நாடாளுமன்ற பழையவற்றின் நல்ல விடயங்களை உள்வாங்கி, தங்கள் கட்சியின் அனுபவமிக்க உறுப்பினர்களால் வழிகாட்டலில், மக்கள் சேவையில் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...