3 28
ஏனையவை

அநுர அலையில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அர்ச்சுனா

Share

அநுர அலையில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அர்ச்சுனா

இலங்கையில் ஏற்பட்ட அநுர அலை தென்னிலங்கை அரசியல் மட்டுமன்றி, தமிழர் தேசிய கட்டமைப்பை தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய, வட மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

தமிழர் தாயகத்தில் பாரம்பரிய தமிழ் கட்சி பிளவுபட்டு பல பிரிவுகளாக களமிறங்கிய பெரும் தோல்வியை சந்திதுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாறாக கடந்த சில மாதங்களாக பெரும் பேசுபொருளாக இருந்த வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் மீதான மக்களின் ஆதரவு தமிழ் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறுகிய காலத்தில் பிரபலமான வைத்தியர், நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்புகள் தற்போது ஏற்பட்டுள்ளதாக தேர்தல் முடிவுகள் மூலம் அறிய முடிகிறது.எனினும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதுவரை வெளியான யாழ் மாவட்ட தேர்தல் முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தி 59688 வாக்குகளையும் இலங்கை தமிழரசு கட்சி 53250 வாக்குகளையும், சுயேட்சையாக போட்டியிட்ட வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் 21433 வாக்குகளை பெற்றுள்ளார்.

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரியில் 5,978 வாக்குகளும், யாழ்ப்பாணத்தில் 1,067, நெடுந்தீவில் 601 வாக்குகளும் கிளிநொச்சியில் 2,098 வாக்குகளும், மானிப்பாயில் 2,413 வாக்குகளும், நல்லூரில் 2,279 வாக்குகளும், பருத்தித்துறையில் 1,572 வாக்குகளும் வட்டுக்கோட்டையில் 1,877 வாக்குகளையும் பெற்றுள்ளார். அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகும் வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இலங்கையில் அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்தவர்கள் மற்றும் நாடாளுமன்றத்தை பல தடவைகள் பிரதித்துவம் செய்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு இம்முறை மக்களால் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...