2 25
ஏனையவை

மரண சடங்கிற்கு யாழ்ப்பாணம் வந்து சென்ற பெண் விபத்தில் மரணம்

Share

மரண சடங்கிற்கு யாழ்ப்பாணம் வந்து சென்ற பெண் விபத்தில் மரணம்

மரணச் சடங்கு ஒன்றுக்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு சென்றுவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த பெண்ணொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு நேற்றையதினம் (13.11.2024) உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பைச் சேர்ந்த குறித்த பெண்ணும் அவரது உறவினர்களும், யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உறவினரின் மரணச்சடங்கொன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்தாம் திகதி வானில் வீடு நோக்கி புறப்பட்டிருந்தனர்.

இதன்போது, கொக்காவில் பகுதியில் பன்றி ஒன்று வீதிக்கு குறுக்கே ஓடிய நிலையில் பன்றியின் மீது மோதாமல் இருப்பதற்காக வாகனத்தை வலது பக்கம் நோக்கி திருப்பியவேளை வாகனம் தலைகீழாக புரண்டுள்ளது.

இந்நிலையில், விபத்தில் படுகாயம் அடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மூவரும் கடந்த 11ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி விபத்துக்குள்ளான பெண் நேற்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...