ஏனையவை

மரண சடங்கிற்கு யாழ்ப்பாணம் வந்து சென்ற பெண் விபத்தில் மரணம்

Share
2 25
Share

மரண சடங்கிற்கு யாழ்ப்பாணம் வந்து சென்ற பெண் விபத்தில் மரணம்

மரணச் சடங்கு ஒன்றுக்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு சென்றுவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த பெண்ணொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு நேற்றையதினம் (13.11.2024) உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பைச் சேர்ந்த குறித்த பெண்ணும் அவரது உறவினர்களும், யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உறவினரின் மரணச்சடங்கொன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்தாம் திகதி வானில் வீடு நோக்கி புறப்பட்டிருந்தனர்.

இதன்போது, கொக்காவில் பகுதியில் பன்றி ஒன்று வீதிக்கு குறுக்கே ஓடிய நிலையில் பன்றியின் மீது மோதாமல் இருப்பதற்காக வாகனத்தை வலது பக்கம் நோக்கி திருப்பியவேளை வாகனம் தலைகீழாக புரண்டுள்ளது.

இந்நிலையில், விபத்தில் படுகாயம் அடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மூவரும் கடந்த 11ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி விபத்துக்குள்ளான பெண் நேற்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...