4 26
ஏனையவை

உக்ரைனின் பாதுகாப்புக்காக மற்றுமொரு ஐரோப்பிய நாட்டுடன் கைக்கோர்த்த பிரித்தானியா

Share

உக்ரைனின் பாதுகாப்புக்காக மற்றுமொரு ஐரோப்பிய நாட்டுடன் கைக்கோர்த்த பிரித்தானியா

உக்ரைனின் பாதுகாப்புக்காக பிரித்தானியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் தங்களுக்கிடையே உடன்படிக்கையொன்றை கையெழுத்திட்டுள்ளன.

பிரித்தானியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு தலைவர்களான ஜான் ஹீலி மற்றும் ஆஞ்சல் டில்வர் ஆகியோர் இந்த உடன்படிக்கையை லண்டனில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் வைத்து கையெழுத்திட்டனர்.

இந்த உடன்படிக்கையின் படி, இரு நாடுகளும் ஒற்றுமையாக உக்ரைனுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன.

இந்நிலையில், இரு நாடுகளும் ஐரோப்பாவில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முயற்சிப்பதை இந்த உடன்படிக்கை எடுத்துக்காட்டுவதாக ஜான் ஹீலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 45,000இற்கும் மேற்பட்ட உக்ரைனிய வீரர்களுக்கு இராணுவ பயிற்சிகள் இரு நாடுகளின் உதவியுடனும் வழங்கப்படவுள்ளன.

Share
தொடர்புடையது
25 690723f808229
ஏனையவை

நைஜீரியாவில் ஐ.எஸ். குழுவினர் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் – ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு!

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் இயங்கி வரும் ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதக் குழுவினருக்கு எதிராக அமெரிக்க இராணுவம்...

14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...