24 66cda26014b4f
ஏனையவை

சூர்யாவை தொடர்ந்து மும்பையில் குடியேறிய பிரபல முன்னணி நடிகர்.. யார் தெரியுமா

Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் தற்போது வசித்து வருகிறார். பிள்ளைகளின் படிப்பிற்காக தான் அங்கு சென்றுள்ளதாக ஜோதிகா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சூர்யா – ஜோதிகாவை தொடர்ந்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஜெயம் ரவியும் மும்பைக்கு குடியேறியுள்ளாராம்.

ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தனக்கென்று தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்திருக்கும் ஜெயம் ரவி மும்பைக்கு குடியேறியுள்ளதாகவும், அங்கு தான் தன்னுடைய படங்களின் கதைகளை கூட கேட்டு வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர்கள் ஜெயம் ரவியிடம் கதை சொல்லவேண்டும் என்றாலும் மும்பை தான் செல்லவேண்டுமாம். இந்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி நடிப்பில் பிரதர், காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் பிரதர் திரைப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...