24 667c1c87aba34 1
ஏனையவை

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து விலகிய இரு நீதியரசர்கள்

Share

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து விலகிய இரு நீதியரசர்கள்

இலங்கையின் பிரஜாவுரிமை இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு(Diana Gamage) எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரணை செய்வதிலிருந்து இரண்டு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் விலகிக்கொண்டுள்ளனர்.

டயானா கமகேவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழுவின் உறுப்பினர்கள் என்பதை காரணம் காட்டி, நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோர், இந்த மனுவை விசாரிப்பதில் இன்று(26) இருந்து விலகிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2024 மே மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது டயானா கமகே தனது அறிக்கைகள் மூலம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தை செய்ததாக, உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு இந்த மனுவை ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஏற்றுக்கொண்ட நிலையில் விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

வெலிகம நகர சபையின் முன்னாள் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்றும், அவருக்கு இலங்கையின் குடியுரிமை இல்லாததால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்றும் உயர்நீதிமன்றம், மே 8ஆம் திகதியன்று தீர்ப்பளித்திருந்தது.

எனினும் அதன் பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டில், கருத்துரைத்த பிரதிவாதியான டயானா கமகே தாம் அநீதிக்கு ஆளானதாக தெரிவித்திருந்தார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பெண்களுக்கு எதிரான தாக்குதல் என்றும், மேலும் இது வெறுப்பு மற்றும் அரசியல் சதியின் விளைவாகும் என்றும் அவர் தெரிவித்திருந்ததாக மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்ற அடிப்படையில் தீங்கிழைக்கும் வகையில் பிரதிவாதி கருத்துக்களை வெளியிட்டதாக மனுதாரரான வெலிகம நகர சபையின் முன்னாள் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...