images 20
ஏனையவை

உலகை அச்சுறுத்தி வரும் நோய்த்தாக்கம் : விதிக்கப்பட்ட இறக்குமதி தடை

Share

உலகை அச்சுறுத்தி வரும் நோய்த்தாக்கம் : விதிக்கப்பட்ட இறக்குமதி தடை

பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் விலங்குகள் அல்லது விலங்குகளுக்கான பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை இன்று(23.06.2024) திணைக்களத்தின் தலைமை இயக்குநர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக பல நாடுகளில் பதிவாகியுள்ள ஏவியன் இன்புளுவன்சா A(H5N1) வைரஸ் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டைப் பாதுகாக்கவே கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், அமெரிக்காவின் பல மாநிலங்களில் முதன்முறையாக கால்நடைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே இது ஒரு தீவிரமான நிலைமை என்றும் கொத்தலாவல குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தற்போது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் எனவும் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள இயக்குநர் ஹேமாலி கேட்டுக்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...