24 665e0aff763f6
ஏனையவை

புகழின் உச்சிக்கு சென்றதும் திமிரா? கால்ஷீட்டுக்காக வெயிட் பண்ணும் லிங்குசாமி! இழுத்தடிக்கும் சூரி

Share

புகழின் உச்சிக்கு சென்றதும் திமிரா? கால்ஷீட்டுக்காக வெயிட் பண்ணும் லிங்குசாமி! இழுத்தடிக்கும் சூரி

தமிழ் சினிமாவில் தற்போது பெரும்பாலானோரின் கவனத்தைப் பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் சூரி. ஆரம்பத்தில் சீரியல் நடிகராக இருந்து அதற்கு பின்பு காமெடி நடிகராக, தற்போது தனது விடாமுயற்சியின் காரணமாக கதையின் நாயகனாக உருமாறி உள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலைப் படம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த படத்தில் தனது உடலை வருத்தி மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருந்தார் சூரி. அவரது விடாமுயற்சிக்கு கிடைத்த பலனாக அந்த படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் நாயனாக நடிக்க சூரிக்கு வாய்ப்புகள் குவிந்தன.

தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் சூரி. இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். இதிலும் நடிகர் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்களை இயக்கிய லிங்குசாமி தற்போது சூரியை வைத்து படமெடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் லிங்குசாமிக்கு கால்சீட் கொடுக்க சூரி இழுத்தடித்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு காரணம் அவர் சூரியை வைத்து காமெடி படம் எடுக்க திட்டமிட்டுள்ளாராம். மீண்டும் காமெடி டிராக்டில் போக வேண்டாம் என சூரி யோசிப்பதனால் அவர் இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 7 1
ஏனையவை

தையிட்டியில் தொடரும் பதற்றம்: சிலையுடன் வந்த குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர் – பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பு!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் காணி உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று யாழ். பல்கலைக்கழக...

images 6 1
ஏனையவை

ஜனவரி 5 முதல் மழை அதிகரிக்கும்: வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, எதிர்வரும் ஜனவரி 05-ஆம் திகதி முதல்...

26 6958b2e786c0e
ஏனையவை

திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை: 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் கடற்கரையில் அனுஷ்டிப்பு!

திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல்...

image 339b4818b7
ஏனையவை

மின்சாரக் கட்டணத்தை 11% அதிகரிக்கத் திட்டம்: மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி – ஜனக ரத்நாயக்க கடும் சாடல்!

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகளைக் காரணம் காட்டி, மின்சாரக் கட்டணத்தை 11% அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார...