24 6628d483163be
ஏனையவை

மீண்டும் காட்டுத்தீ அபாயத்தில் கனடா… அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

Share

மீண்டும் காட்டுத்தீ அபாயத்தில் கனடா… அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

வழக்கத்துக்கு மாறாக, குளிர்காலத்தில் உஷ்ணம், அதிகரித்து வரும் வறட்சி மற்றும் எதிர்வரும் மாதங்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம் என பல காரணங்களால், மீண்டும் ஒரு பயங்கர அழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ சூழலை கனடா எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக பெடரல் அரசு எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள மேற்கு கெலோனா நகரில் வீடுகளை அழித்து பெரும் சேதத்தையும் மக்களுக்கு கடும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். அப்போது, கண்ணுக்கு முன்னே, காட்டுத்தீயில் வீடு பற்றி எரிவதைக் கண்டும் ஒன்றும் செய்ய இயலாமல் கண்ணீருடன் மக்கள் நின்ற காட்சிகள் பல வெளியாகின.

இந்நிலையில், இந்த இளவேனிற்காலம் மற்றும் கோடையிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நாடு மீண்டும் காட்டுத்தீ அபாயத்தை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

தெற்கு கியூபெக், கிழக்கு ஒன்ராறியோ மற்றும் மேற்கு கனடா முதலான பல பகுதிகள் ஏப்ரல் மாதத்தில் காட்டுத்தீ அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன. அந்த அபாயம், மே மாதத்திலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவசர கால ஆயத்தங்கள் துறை அமைச்சரான Harjit Sajjan இது குறித்துக் கூறும்போது, கோடை எப்படி இருக்கும் என்பதை கணிக்க இயலாத நிலை இருந்தாலும், பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் மோசமாகிக்கொண்டே செல்வதால், கனடாவுக்கு காட்டுத்தீ பெரும் சவாலாக இருக்கும் என்பதை மட்டும் தெளிவாக உணர்ந்துகொள்ளமுடிகிறது, காட்டுத்தீயால் கனேடியர்களுக்கு ஏற்படும் பண இழப்பும், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்கிறார்.

Share
தொடர்புடையது
images 5
ஏனையவை

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்: டிசம்பர் 30-இல் தேடல் தொடக்கம்!

காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் (பத்து ஆண்டுகள்) மேலாகியும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய வானூர்தியை (MH370) தேடும்...

images 4
ஏனையவை

தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்: 22 மாவட்டங்கள் அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பு!

‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள்...

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 02 டிசம்பர் 2025 : சுப பலன்கள் கிடைக்கும் ராசிகள்

இன்று டிசம்பர் 2, 2025 கார்த்திகை மாதம் 16ம் தேதி செவ்வாய் கிழமை, மேஷ ராசியில்...

Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...