Mahinda Ranil 2 1 6 scaled
ஏனையவை

புடின் இறந்திருக்கலாம்..! எழுந்துள்ள புதிய சர்ச்சை

Share

புடின் இறந்திருக்கலாம்..! எழுந்துள்ள புதிய சர்ச்சை

சோவியத் யூனியனின் முன்னாள் தலைவரும் சர்வாதிகாரியுமான ஸ்டாலினுடைய பேரன், ரஷ்ய ஜனாதிபதி இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார்.

ரஷ்ய அரசியலில் ஈடுபாடு கொண்டவரான ஜேக்கப், புடின் இறந்திருக்க அதிக வாய்ப்புள்ளது என்றும், கிரெம்ளின் வட்டாரத்தைச் சேர்ந்த, தேர்வு செய்யப்படாத சிலர், நடிகர்கள் சிலரை புடின் போல நடிக்கவைத்துவிட்டு, அவர்களை பின்னாலிருந்து கட்டுப்படுத்திவருவதாகவும் கூறியுள்ளார்.

உக்ரைன் இராணுவ உளவுத்துறையும், புடினுக்கு பதிலாக போலிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக நீண்ட நாட்களாக கூறிவருகிறது.

அத்துடன், ரஷ்யாவிலேயே சிலர் புடின் இறந்துவிட்டதாகவும்,அவருக்கு பதிலாக போலிகளை நடிக்கவைத்து சிலர் அரசைக் கட்டுப்படுத்திவருவதாகவும் கருதுகிறார்கள்.

வேறு சிலரோ, புடின் கடுமையாக நோய் வாய்ப்பட்டுள்ளதாலோ அல்லது தனது பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக பதுங்குகுழியில் பதுங்கியிருப்பதாலோ அவருக்கு பதிலாக போலிகள் பயன்படுத்தப்படுவதாக கூறுகிறார்கள்.

இதற்கிடையில், இந்த ஆண்டின் துவக்கத்தில், தனது பாடசாலை தோழர்களுக்கே தன்னை அடையாளம் தெரியவில்லை என்று கூறி புடின் சந்தேகத்தை அதிகமாக்கினார்.

இந்நிலையில், புடின் இறந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறும் ஸ்டாலினுடைய பேரனான ஜேக்கப், இப்போதிருக்கும் புடின், தான் ஒரு செல்வாக்கான அதிகாரம் மிக்க நபர் என்பது போல நடந்துகொள்வதில்லை என்றும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...