tamilnig scaled
ஏனையவை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் பிரபல நடிகை

Share

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் பிரபல நடிகை

இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களாக முன்னணி நடிகையான தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

3 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் அவர்கள் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று கொழும்பு கோட்டை பிரதான நீதவான் திலின கமகேவிடம் தெரிவித்தது.

இருவருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இருந்தால் மட்டும் சந்தேகநபர்களாக பெயரிடுமாறு நீதவான் விடுத்துள்ள உத்தரவிற்கமைய, குற்றப் புலனாய்வு திணைக்களம், சம்பவத்தில் சந்தேக நபர்களாக பெயரிடப்படுவதாக நீதவானிடம் தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதால், தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் தமக்கு தேவையான பிணையை வழங்குமாறு சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் கோரியிருந்தனர். இது தொடர்பில் நீதிமன்றில் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நடிகை தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் நேற்றைய தினமாக ஆறாம் திகதி வரை கைது செய்ய தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நேற்று முன் பிணை வழங்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...