ஏனையவை

உதவி இயக்குநருடன் ஷங்கரின் மகளுக்கு இரண்டாவது திருமணம்., நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

Share

logo
Desktop

உதவி இயக்குநருடன் ஷங்கரின் மகளுக்கு இரண்டாவது திருமணம்., நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்
Aishwarya,
Shankar Shanmugam,
Marriage,
Aditi Shankar,

பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள் மீண்டும் திருமணம் செய்யவுள்ளார்.

முதல் கணவரை பிரிந்த ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுடன் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டார்.

இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதை ஷங்கரின் இரண்டாவது மகள் நடிகை அதிதி சங்கர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரனை 2021-இல் திருமணம் செய்தார்.

ஆனால் சில மாதங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், ரோகித் தாமோதரன் நடத்தும் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பெண் வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்ததையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஐஸ்வர்யா ரோஹித்திடம் இருந்து விவாகரத்து பெற்றார். அன்று முதல் ஐஸ்வர்யா தனது தந்தையுடன் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டார்.

சமீபத்தில் ஐஸ்வர்யாவுக்கும் உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், வருங்கால ஜோடிக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தருண் கார்த்திகேயன் உதவி இயக்குனர் மட்டுமல்ல. மேலும் பாடலாசிரியர் மற்றும் பின்னணி பாடகரும் ஆவார்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...