5 7 scaled
இந்தியாஏனையவைசெய்திகள்

இலங்கை தமிழர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்- தமிழக அரசு

Share

இலங்கை தமிழர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்- தமிழக அரசு

தமிழக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் குடும்பத்துப் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க அரசு முன்வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை திமுக அமல்படுத்தியது.

அதன்படி கடந்த செப்டம்பர் 15-ம் திகதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை பெற்று வருகிறார்கள்.

இத்திட்டத்தில் பயன்பெற மேலும் பல லட்சம் பெண்கள் மேல்முறையீடு செய்து காத்திருக்கின்றனர்.

அதன்படி, மேல்முறையீடு செய்துள்ளவர்களில் சில லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குடும்பத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது.

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 19,487 இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அந்தக் குடும்பத்துப் பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் வகையில் அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

பிப்ரவரி அல்லது மார்ச் முதல், முகாம்களில் வசிக்கும் குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என தெரிகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...