ஏனையவை

நாடாளுமன்றத்தில் கைகலப்பு: டயானா கமகே வைத்தியசாலையில்

rtjy 248 scaled
Share

நாடாளுமன்றத்தில் கைகலப்பு: டயானா கமகே வைத்தியசாலையில்

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர் இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அவர் தகாத வார்த்தையால் பேசியுள்ள காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தணிக்க முயன்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித்தை டயானா கமகே தாக்க முற்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தான் சபைக்கு வெளியே வைத்து தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம்சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் (20.10.2023) விசேட உரையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கியதாகவும் இது தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தச் சம்பவத்துடன், பிரதமரின் முன்மொழிவுக்கு இணங்க, நாடாளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

Share
Related Articles
tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 09 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.05. 2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...