உலகம்ஏனையவைசெய்திகள்

காட்டுத்தீ காரணமாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான கனேடியர்கள்

Share

காட்டுத்தீ காரணமாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான கனேடியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஆறுதலடைந்துள்ளார்கள்.

கனடாவில் காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட Yellowknife பகுதியிலிருந்து, 20,000க்கும் மேலான மக்கள் ஆகத்து மாதத்தின் மத்தியில் வெளியேற்றப்பட்டார்கள்.

இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, வெளியேற்ற உத்தரவு நேற்று மதியம் விலக்கிக்கொள்ளப்பட்டது. எப்போது வீட்டுக்குத் திரும்புவோம் என ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கு இந்த செய்தி பெரிய ஆறுதலை அளித்துள்ளது.

நகரத்துக்கு வரும் விமானங்கள் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ள நிலையில், ’Welcome Home’ என்னும் பதாகை மீண்டும் தங்கள் வீடுகளுக்கு வரும் மக்களை வரவேற்கும் வகையில் Behchoko பகுதிக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீக்குப் பின் நகரம் சற்று வித்தியாசமாகத்தான் உள்ளது என வீடுகளுக்குத் திரும்பும் மக்களுக்குத் தெரிவிக்கும் நகர மேயரான Rebecca Alty, காட்டுத்தீயிலிருந்து நகரத்தை பாதுகாக்கும் வகையில் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனாலும், கடைகள், நகர சேவைகள் ஆகியவை மீண்டும் இயங்கத்தொடங்குவதற்கு சற்று தாமதமாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார் அவர்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...