இலங்கைஏனையவைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை

rtjy 48 scaled
Share

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் சர்வதேச மட்டத்திலான விசாரணை நடத்தப்பட வேண்டியது அத்தியாவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (05.09.2023) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பான தகவல்கள் இவ்வாறு அம்பலப்படுத்தப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.

அரசாங்கமே இந்த தகவல்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். எனவே சனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து சர்வதேச விசாரணை கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த குண்டு தாக்குதலுடன் தொடர்புப்பட்டிருக்கலாம் என அரசாங்க அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றில் இன்றைய தினம் கூறியதாகவும், இந்த கூற்றின் மூலம் அவர் கர்தினாலை இழிவுப்படுத்தி உள்ளதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...