7 9 scaled
உலகம்ஏனையவைசெய்திகள்

புலம்பெயர் மக்களை எல்லையில் கொன்று குவிக்கும் மத்திய கிழக்கு நாடு

Share

ஏமன் எல்லையில் புலம்பெயர் மக்களை சவுதி அரேபிய எல்லைக் காவலர்கள் இரக்கமின்றி பெருமளவில் கொன்று தள்ளியதாக பகீர் தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட ஏமனைக் கடந்து சவுதி அரேபியாவை அடையச் சென்ற எத்தியோப்பிய மக்கள் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் காயங்களுடன் தப்பிய புலம்பெயர் மக்களில் பலர், வழியெங்கும் சடலங்களை பார்க்க நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளனர். புலம்பெயர் மக்களை ஏமன் எல்லையில் சவுதி அரேபியா வேட்டையாடுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை முன்பு அந்த நாடு மறுத்து வந்தது.

இந்த நிலையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பு இந்த விவகாரம் தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புலம்பெயர் மக்கள் மீது மழை போன்று துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவுடனான யேமனின் ஆபத்தான வடக்கு எல்லையில் சவுதி காவல்துறை மற்றும் ராணுவத்தினர் இணைந்தே கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

காயங்களுடன் தப்பிய 21 வயதான முஸ்தபா சௌபியா முகமது என்ற இளைஞர் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தம்முடன் எல்லையை கடக்க முயன்ற குழுவினரில் கொத்தாக 45 பேர்கள் சவுதி பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானதாக தெரிவித்துள்ளார்.

3 மாதங்கள் பயணித்து கடும் போராட்டங்களுக்கு பின்னர் எல்லையை நெருங்கிய நிலையில், சவுதி அரேபிய எல்லைக்காவலர்கள் கண்மூடித்தனமாக சுட்டதாக அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

18 வயதான இளம்பெண் ஒருவர் சுமார் 1950 பவுண்டுகள் கடத்தல்காரர்களுக்கு செலவிட்டு ஏமன் எல்லையை அடைந்ததாகவும், ஆனால் துப்பாக்கி குண்டுகளை எதிகொள்ள நேர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒற்றை துப்பாக்கி குண்டால் தனது ஒரு கையில் மொத்த விரல்களும் சிதறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அமைப்பு ஒன்று தெரிவிக்கையில்,

கடுமையான போராட்டத்திற்கு பின்னர் ஆண்டுக்கு 200,000 மக்கள் சவுதி அரேபியாவில் நுழையும் பொருட்டு ஏமன் எல்லையை கடப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நெருக்கடியான பயணத்தில் பலர் சிறைபிடிக்கப்படுவதுடன், கடுமையான தாக்குதலுக்கும் இலக்காகின்றனர்.

புலம்பெயர் மக்களின் முக்கிய பாதையாக கருதப்படும் ஏமனில் பயணத்தின் இடையே இறந்தவர்களின் கல்லறைகள் தான் நிரம்பியுள்ளதாக கூறுகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...