திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள 3,000 மைல்கள் பயணித்த பெண்
ஏனையவை

திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள 3,000 மைல்கள் பயணித்த பெண்

Share

திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள 3,000 மைல்கள் பயணித்த பெண்

இந்திய வம்சாவளி பெண் ஒருவர் தமது நண்பரின் திருமணத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, 3,000 மைல்கள் பயணித்து ஸ்கொட்லாந்து சென்ற நிலையில், ஏற்பட்ட சுவாரசிய திருப்பம் குறித்து அவரே பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் குடியிருக்கும் ஆர்த்தி மாலா என்ற இந்திய வம்சாவளி பெண் 3,000 மைல்கள் பயணித்து ஸ்கொட்லாந்து சென்றுள்ளார். கிளாஸ்கோவில் வாடகை டாக்ஸியை அமர்த்திக் கொண்டு திருமணம் நடக்கவிருக்கும் அரங்கிற்கும் சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சென்ற போது தான் புரிந்து கொண்டார், அது தமது நண்பரின் திருமண அரங்கு அல்ல என்பதை. தனது நண்பர் கவுரவ் என்பவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஆர்த்தி மாலா சனிக்கிழமை கிளாஸ்கோவிற்கு சென்றுள்ளார்.

ஆனால் அந்த அரங்கத்திற்கு சென்ற பின்னர் தான் அந்த விழாவானது கெய்த்லின் மற்றும் ஸ்டீபன் என்பவர்களின் திருமணம் என்று அவர் தெரிந்து கொண்டார்.

சில சடங்குகளை தவறவிட்டதாக
இதனிடையே, விசாரித்ததில் அவரது நண்பரின் திருமணமானது அங்கிருந்து ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ள இன்னொரு அரங்கத்தில் நடைபெறுவதாக அறிந்துகொண்டார்.

உடனடியாக அங்கிருந்து இன்னொரு டாக்ஸியில் அந்த அரங்கம் சென்றுள்ளார் ஆர்த்தி மாலா. ஆனால் தாமதமானதால் குறிப்பிட்ட சில சடங்குகளை அவர் தவறவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...