கருணாநிதி எனக்கு அரசியல் ஆசான்! குஷ்பூ பேச்சால் குழப்பத்தில் பாஜக
ஏனையவை

கருணாநிதி எனக்கு அரசியல் ஆசான்! குஷ்பூ பேச்சால் குழப்பத்தில் பாஜக

Share

கருணாநிதி எனக்கு அரசியல் ஆசான்! குஷ்பூ பேச்சால் குழப்பத்தில் பாஜக

நான் பாஜகவில் இருந்தாலும் கருணாநிதி தான் எனக்கு அரசியல் ஆசான் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ பேசியது பாஜகவினரிடையே அதிருப்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு கருணாநிதி மற்றும் பெரியார் மீது கொண்ட பற்று காரணமாக நடிகை குஷ்பூ தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். பின்பு, சில காரணங்களால் திமுகவில் இருந்து விலகி 2014 ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார்.

இதனையடுத்து அவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அங்கு, அவருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

இதனிடையே அவர், திமுக மீது பல்வேறு விமர்சனங்களை வைத்து பேசியுள்ளார். அதே போல், திமுகவும் குஷ்புவை கடுமையான விமர்சனம் செய்து வந்தது. தற்போது, ஒட்டு மொத பாஜகவும் திமுகவை விமர்சித்து தான் பேசி வருகின்றன.

திமுக ஒரு ஊழல் கட்சி, குடும்ப கட்சி என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாஜக வைத்து வருகிறது.

இந்நிலையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ, “நான் பாஜகவில் இருந்தாலும் கருணாநிதி எனக்கு எப்போதும் அரசியல் ஆசான். அவரை பற்றி பேச வேண்டும் என்றால் நாள் முழுக்க பேசிக் கொண்டிருப்பேன். நான் திமுகவில் இருந்து வந்தவர்.

அதனால், அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும்” என்று கூறியுள்ளார். தற்போது, குஷ்பூ பேசிய பேச்சு பாஜகவினர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...